நீங்கள் கேட்டுக் கொண்டிருப்பது து சியு லன் பாடிய யு கு இன நாட்டுப்புறப் பாடலாகும். "நான்கு பருவப் பாடல்", இப்பாடலின் தலைப்பாகும். 2006ஆம் ஆண்டு யு கு இன நாட்டுப்புறப் பாடல், சீன அரசவையின் முதலாவது தொகுதி தேசிய நிலை பொருள் சாரா பண்பாட்டு மரபுச் செல்வப் பட்டியலில் சேர்க்கப்பட்டது. 2009ஆம் ஆண்டு முதியவர் து சியு லன், தேசிய நிலை யு கு இன நாட்டுப்புறப் பாடல் வாரிசுகளின் பெயர் பட்டியலில் சேர்க்கப்பட்டார். அவர் பாடிய சில நாட்டுப்புறப் பாடல்கள், அதிகாரப்பூர்வமாக வெளியான "யு கு இன நாட்டுப்புறப் பாடல்கள் தொகுப்பில்" சேர்க்கப்பட்டுள்ளன. யு கு இனத்தின மொழிக்கு எழுத்து இல்லாமை, நாடோடி வாழ்க்கையின் தனிச்சிறப்பு ஆகியவற்றால், நாட்டுப்புறப் பாடல்களைப் பாடுவது மூலம், யு கு இனத்தவர்கள், வரலாற்றைக் கற்றுக் கொண்டு, அறிவுகளைப் பரவல் செய்யும் மிக முக்கிய வழிமுறையாக மாறியுள்ளது.
முதியவர் து சியு லன்னின் தந்தை, யு கு இனத்தின் நாட்டுப்புறப் பாடகர் ஆவார். து சியு லன்னின் குழந்தைப் பருவத்தில், தந்தை, து சியு லனுக்கும் அவரது சகோதரிகளுக்கும் பாடல்களைப் பாடக் கற்றுக்கொடுத்தார்.