ஏப்ரல் 14ஆம் நாள் சீனாவின் யுன்னான் மாநிலத்தின் சி சுவாங் பான்னா சோவில் நீர் தெளிப்பு விழா கோலாகரமாக நடந்தது. சீனாவின் தாய் இன நாட்காட்டின்படி, இவ்வாண்டு தாய் இனத்தின் 1376ஆம் புத்தாண்டு கொண்டாட விழாவின் கடைசி நாளாகும். தேசிய இன ஆடைகளை அணிந்த உள்ளூர் மக்களும் பயணியர்களும் ஒருவருக்கொருவர் மேல் நீர் தெளித்து, இனிமை, உடல் நலம் பெற ஒருவரையொருவர் வாழ்த்தினர். நீர் தெளிப்பு விழா தாய் இனத்தின் பாரம்பரிய விழாவாகும். அதற்கு ஆயிரக்கணக்கான ஆண்டுகள் வரலாறு உள்ளது.