• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
மாலனின் பெய்ஜிங் பயணம்
  2014-04-16 14:39:14  cri எழுத்தின் அளவு:  A A A   

தொடர்புடையது: திரு. மாலனின் போ ஆவ் பயணம் 

2014ஆம் ஆண்டு ஏப்ரல் 13ஆம் நாள் திரு. மாலன் பெய்ஜிங் வந்து, அரண்மனை அருங்காட்சியகம் மற்றும் டியென் அன் மன் சதுக்கத்தில் பயணம் மேற்கொண்டார்.

திரு. வி.நாராயணன் (மாலன்) புதிய தலைமுறை ஊடக தனியார் நிறுவனத்தின் இயக்குனர் (திட்டமிடல் மற்றும் வளர்ச்சி) ஆவார். மிகவும் பிரபலமான புதிய தலைமுறை என்ற முழுநேர செய்தித் தொலைக்காட்சி மற்றும் புதுயுகம் என்ற பொழுதுபோக்கு தொலைக்காட்சி அலைவரிசைகளை இந்த புதிய தலைமுறை ஊடக தனியார் நிறுவனம் இந்தியாவில் நடத்தி வருகிறது. மேலும், புதிய தலைமுறை, புதிய தலைமுறை கல்வி என்ற வாராந்திர இதழ்களின் பதிப்பாசிரியராகவும் திரு. வி.நாராயணன் (மாலன்) விளங்குகிறார்.

முன்னதாக, சன் தொலைக்காட்சிக் குழுமத்தின் சன் செய்திகள் என்ற இந்திய மொழிகளில் முதலாவது முழுநேர செய்திக் தொலைகாட்சி அலைவரிசையை தொடங்கிய பெருமைக்குரியவர் திரு.வி.நாராயணன் அவர்களே. மேலும், இந்தியா டுடே (தமிழ்) தினமணி, குமுதம் மற்றும் குங்குமம் போன்ற முக்கிய தமிழ் இதழ்களின் பதிப்பாசிரியராக பணியாற்றி மிகவும் புகழ்பெற்றவர்.

அமெரிக்காவில் காய்னஸ்வில்லேவிலுள்ள ஃபுளோரிடா பல்கலைகழகத்தில் இதழியலில் முதுகலைப் பட்டம் பெற்ற இவர், சிறப்பு பதிப்பிப்பு படிப்பில் முதன்மை பெற்று விருதோடு மதிப்பளிக்கப்பட்டவராவார்.

1 2 3 4 5
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040