கடைசி தகவல்படி, ஏப்ரல் 18ஆம் காலை வரை, இவ்விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 25 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை இன்னும் 271 பேரைக் காணவில்லை. மேலும் 179 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.
தென் கொரியாவின் தொடர்புடைய பிரிவுகள் அன்றே மீட்புதவிப் பணியை வலுப்படித்தியது. மொத்தம் 171 கப்பல்களும் படகுகளும், 29 விமானங்களும் அனுப்பப்பட்டுள்ளன. பல முக்குளிப்பு மீட்புதவிப் பணியாளர் உட்பட 550க்கு மேலானோர் மீட்புதவிப் பணியில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.