• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
தென்கொரியா: கப்பல் விபத்தில் அதிக முனனேற்றமில்லா மீட்புதவி
  2014-04-18 09:28:54  cri எழுத்தின் அளவு:  A A A   
செவேல் எனும் மூழ்கிய கப்பலுக்கான மீட்புதவிப் பணியைத் தொடர்புடைய பிரிவுகள் ஏப்ரல் 17ஆம் நாள் வலுப்படுத்தியது. ஆனால் வானிலை, நீரோட்டம் முதலியவை மோசமாகிவிட்டதால், மீப்புதவிப் பணியில் அதிக முன்னேற்றம் ஏற்பவில்லை. இவ்விபத்திற்கான காரணத்தையும் புலணாய்வு செய்து வருவதாக தென்கொரிய மேற்கு கடல் பகுதியின் கடலோர காவல்படை அன்று தகவல் வெளியிட்டது.

கடைசி தகவல்படி, ஏப்ரல் 18ஆம் காலை வரை, இவ்விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 25 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை இன்னும் 271 பேரைக் காணவில்லை. மேலும் 179 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

தென் கொரியாவின் தொடர்புடைய பிரிவுகள் அன்றே மீட்புதவிப் பணியை வலுப்படித்தியது. மொத்தம் 171 கப்பல்களும் படகுகளும், 29 விமானங்களும் அனுப்பப்பட்டுள்ளன. பல முக்குளிப்பு மீட்புதவிப் பணியாளர் உட்பட 550க்கு மேலானோர் மீட்புதவிப் பணியில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040