• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஈரானின் நிதி மீது அமெரிக்காவின் அறிவிப்பு
  2014-04-19 18:14:23  cri எழுத்தின் அளவு:  A A A   

வெளிநாடுகளில் 45கோடி அமெரிக்க டாலர் மதிப்புள்ள ஈரானின் நிதி முடக்கத்திலிருந்து விடுவிக்கப்படும். ஆனால், இந்த நிதியை சிரியாவின் ஹிஸ்புல்லா ஆயுதப்படைக்கு வழங்கினால், ஈரான் மீது அமெரிக்கா புதிய தடை நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.

அமெரிக்க வெளியுறவு அமைச்சகத்தின் துணைச் செய்தித்தொடர்பாளர் மரில் ஹாஃப 18-ஆம் நாள் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் இவ்வாறு தெரிவித்தார்.

பன்னாட்டு அணு ஆற்றல் நிறுவனம் வெளியிட்ட புதிய அறிக்கையின் படி, கடந்த ஆண்டின் நவம்பர் திங்களில் ஈரான் அணு ஆற்றல் பிர்ச்சினைக்கான ஆறு தரப்புகளுடன் உருவாக்கிய தொடக்க உடன்படிக்கையை ஈரான் செயல்படுத்தியுள்ளது. எனவே, அமெரிக்கா தனது வாக்குறுதியை நிறைவேற்றும் என்று ஹாஃப குறிப்பிட்டார்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040