திபெத்திய மருந்து, மருத்துவம், கல்வி, அறிவியல் ஆய்வு உள்ளிட்ட துறைகளின் வளர்ச்சியுடன், 2020ஆம் ஆண்டுக்குள் 95 விழுக்காட்டுக்கு மேலான குடியிருப்பு பகுதிகளிலும் 100 விழுக்காட்டு வட்ட மருத்துவ மையங்களிலும் திபெத்திய மருத்துவச் சிகிச்சை அறையும் திபெத்திய மருந்து அகமும் நிறுவப்படும். மேலும், 75 விழுக்காட்டுக்கு மேலான கிராம மருத்துவ அகத்தில் திபெத்திய மருத்துவச் சிகிச்சை சேவை வழங்கப்படும். திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் சுகாதாரப் பணியகத்திலிருந்து கிடைத்த தகவல் மூலம் இது தெரிய வந்துள்ளது.