சீன தேசிய எரியாற்றல் பணியகத்தின் முதல் கூட்டத்துக்கு ஏப்ரல் 18ஆம் நாள், சீன தலைமை அமைச்சர் லீ க் ச்சியாங் தலைமை தாங்கினார்.
சீனாவை நவீனமயமாக்கும் ஆக்கப்பணியுடன் எரியாற்றல் வினியோகமும் பாதுகாப்பும் நெருக்கமாக தொடர்பு கொள்கிறன. வளரும் பெரிய நாடாக, எதிர்காலத்தில் சீனாவின் எரியாற்றல் தேவை அதிகரிக்கும். சீனா, எரியாற்றல் வினியோகத்தை வலுப்படுத்தி, சர்வதேச ஒத்துழைப்பை முன்னேற்ற வேண்டும். பாதுகாப்பு நிலைமையில், கிழக்குப் பகுதியின் கடலோர பிரதேசங்களில், அணு மின்சார உற்பத்தியை துவக்க வேண்டும். நீர், காற்று, சூரிய ஆற்றல் ஆகிய மூலவளங்களைப் பயன்படுத்தி, மின்சார உற்பத்தியை வலுப்படுத்த வேண்டும் என்று லீ க் ச்சியாங் கூறினார்.