2014ஆம் ஆண்டு பன்னாட்டுக் கடற்படை ராணுவப் பயிற்சி சீனாவின் சிங்தாவ் நகருக்கு அருகிலுள்ள கடற்பரப்பில் விரைவில் நடைபெறவுள்ளது.
சீனா, பாகிஸ்தான், இந்தோனேசியா, சிங்கப்பூர், இந்தியா, மலேசியா, வங்காளத்தேசம், புருணை ஆகிய எட்டு நாடுகளின் போர் கப்பல்கள் இந்த ராணுவப் பயிற்சியில் கலந்து கொள்ளும்.
இப்பன்னாட்டுக் கடற்படை ராணுவப் பயிற்சி, சீனக் கடற்படை நிறுவப்பட்ட நாளைக் கொண்டாடும் நடவடிக்கையாகும். சீனக் கடற்படையின் செய்தித் தொடர்பாளர் லியாங்யாங் 20ஆம் நாள் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் இவ்வாறு தெரிவித்தார்.