இந்தியாவிலிருந்து இறக்குமதியாகும் எண்ணெய் கட்டணத்தை குறிப்பிட்ட நேரத்தில் நேபாளம் செலுத்தாதது, இந்தியப் பொதுத் தேர்தல் ஆகியவை இந்த எண்ணெய் பற்றாக்குறை ஏற்பட காரணங்களாகும் என்று அந்நாட்டு வணிக மற்றும் வினியோக அமைச்சர் சுனில் பகதுர் தாபா தெரிவித்தார்.
இப்போது, நேபாள எண்ணெய் நிறுவனம் நாளுக்கு 2 இலட்சம் 50 ஆயிரம் லிட்டர் எண்ணெயை தலைநகருக்கு வழங்குகிறது. இது ஒரு நாளுக்கு அங்குள்ள தேவையை விட 1 இலட்சம் லிட்டர் எண்ணெய் குறைவாகும்.