ஜப்பான் தலைமை அமைச்சர் ஷின்சோ அபே 21ஆம் நாள் யசுகுனி கல்லறையில் படையலிட்டார். அவரது இச்செயலுக்கு சீனா கண்டனம் தெரிவித்து, நிலைப்பாட்டையும் தெளிவுபடுத்தியுள்ளது என்று சின்காங் கூறினார். ஜப்பான் அதன் ஆக்கிரமிப்பு வரலாற்றை சரிவர நோக்கி மீளாய்வு செய்ய வேண்டும். வரலாற்றுப் பிரச்சினையில் சரியான மனநிலையுடன் ஆத்திரமூட்டும் செயலை நிறுத்தி, பயனுள்ள நடவடிக்கைகளின் மூலம் ஆசிய நாடுகளிலும் உலகச் சமூகத்திலும் நம்பிக்கையைப் பெற வேண்டும் என்று சின்காங் குறிப்பிட்டார்.