இலங்கை பன்னாட்டு வர்த்தக ஒத்துழைப்பு அமைச்சர் ஷராத் அமுனுகம வர்த்தக பிரதிநிதிக் குழுவுக்குத் தலைமை தாங்கி, வங்காளதேசத்தின் வணிக அமைச்சர் தோஃபெயில் அகமட்டுடன் 21ஆம் நாள் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இருநாடுகளிடையில், பொருளாதார மற்றும் வர்த்தக ஒத்துழைப்பு தடையின்றி நடைபெற்று வருகிறது. வர்த்தகத் தேவையும் அதிகம். எனவே ஒன்றுக்கொன்று சலுகை தரும் உடன்படிக்கை இருநாடுகளின் வர்த்தக வளர்ச்சிக்கு புதிய வாய்ப்புகளை வழங்கும் என்று அகமட் தெரிவித்தார்.