• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
துப்புத்துலக்கப்பட்ட அறிவுச்சார் சொத்துரிமை மீறல் வழக்குகள்
  2014-04-22 17:34:38  cri எழுத்தின் அளவு:  A A A   
ஏப்ரல் 26ஆம் நாள் உலக அறிவுச்சார் சொத்துரிமை நாளாகும். அதை முன்னிட்டு, 2013ஆம் ஆண்டு சீன அறிவுச்சார் சொத்துரிமை வளர்ச்சி பற்றிய செய்தியாளர் கூட்டம் 22ஆம் நாள் பெய்ஜிங்கில் நடைபெற்றது. கடந்த ஆண்டு சீனாவில் அறிவுச்சார் சொத்துரிமை மீறல் தொடர்புடைய 59 ஆயிரம் வழக்குகள் துப்புத்துலக்கப்பட்டு, 50 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று இக்கூட்டத்தில் தகவல் வெளியானது.

இதனிடையில், சீனாவின் அறிவுச்சார் சொத்துரிமை சட்ட விதி அமைப்பு முறையின் கட்டுமானம் நிதானமாக முன்னேறி வருகிறது. வணிகச் சின்ன சட்டம், படைப்புரிமை சட்டத்தின் நடைமுறை விதிகள், கணினி மென் பொருட்களின் பாதுகாப்பு விதிகள் உள்ளிட்டவையின் சீர்திருத்தப் பணியும் நிறைவேற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040