ஒத்துழைப்பு, நம்பிக்கை, கூட்டு வெற்றி ஆகியவை, புதிய ரக கடற்படை உறவைக் கூட்டாக உருவாக்கும் முக்கிய அம்சங்களாகும் என்று சீன மத்திய இராணுவக் கமிட்டியின் உறுப்பினரும், கடற்படையின் முதன்மை தலைவருமான வூ ச்சென்லீ கூறியுள்ளார். ஏப்ரல் 22ஆம் நாள் நடைபெற்ற 14வது மேற்கு பசிபிக் பெருங் கடற்படையின் கருத்தரங்கு ஆண்டு கூட்டத்தில் உரை நிகழ்த்தியபோது அவர் இவ்வாறு சுட்டிக்காட்டினார். நாட்டின் அமைதி வளர்ச்சி என்ற கருத்தைச் சீனக் கடற்படை உறுதியாகச் செயல்படுத்தும். அத்துடன், பல்வேறு நாடுகளின் கடற்படைகளுடன் இணைந்து, பிரதேச அமைதியையும் நிதானத்தையும் கூட்டாகப் பேணிக்காக்க சீனா விரும்புவதாக அவர் தெரிவித்தார்.
நடப்பு கூட்டத்தின் முக்கிய அம்சமான கடலில் எதிர்பாராத சந்திப்பை எதிர்கொள்ளும் விதிமுறை, கலந்தாய்வு மூலம் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.