உக்ரேனின் தென்கிழக்குப் பகுதியின் நிலைமை தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது. டோனட்ஸக் மக்கள் குடியரசு ஆதரவாளர்களால் உருவாகிய டோனட்ஸக் குடியரசின் தற்காலிக அரசு 22ஆம் நாள் செய்தியாளர் கூட்டத்தை நடத்தியது. பொது மக்கள் வாக்கெடுப்பு மே 11ஆம் நாள் நடைபெறுமென அதில் அறிவிக்கப்பட்டது. டோனட்ஸக் தவிர, ரஷியாவுக்கு ஆதரவான லூஹாங்ஸ் கா மாநிலமும் அதே நாள் பொது மக்கள் வாக்கெடுப்பை நடத்துவதாக அறிவித்துள்ளது.
உக்ரேன் கிழக்குப் பகுதியிலுள்ள பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைகள் மீண்டும் துவங்கும். அந்நாட்டு தற்காலிக அரசுத் தலைவரும் நாடாளுமன்றத் தலைவருமான அலெக்ஸாண்டர் துர்ச்சிநோவ் 22ஆம் நாள் இவ்வாறு கட்டளையிட்டார். அத்துடன், உக்ரேன் நிலைமை குறித்து சர்வதேச சமூகமும் கலந்தாய்வு நடத்தி வருகிறது.