சிறையிலுள்ள கடைசி தொகுதி பாலஸ்தீன மக்களை வாக்குறுதியின்படி இஸ்ரேல் விடுவிப்பது, வரும் 3 திங்களில் எல்லை பிரச்சினைக்கு முயற்சியுடன் தீர்வுக் காண்பது ஆகிய இரண்டு முன்நிபந்தனையில், 29ஆம் நாள் நிறைவு பெறவுள்ள அமைதி பேச்சுவார்த்தை காலத்தை நீட்டிப்பதைப் பாலஸ்தீனம் ஏற்றுக்கொள்ளும். ரமல்லாவில் அமைந்துள்ள அதிகார நிறுவன மாளிகையில் இஸ்ரேல் செய்தியாளர் பிரதிநிதி குழுவை அதேநாள் சந்தித்தபோது அப்பாஸ் இவ்வாறு தெரிவித்தார்.
அமைதி பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தால், 1994ஆம் ஆண்டு பாலஸ்தீன தேசிய அதிகார நிறுவனம் உருவாக்கப்பட்டதற்கு முன் பாலஸ்தீனத்திலுள்ள அனைத்து விவகாரங்களையும் முழு பொறுப்புடன் நிர்வகிக்க வேண்டியதை இஸ்ரேல் எதிர்கொள்ள நேரிடும் என்றும் அப்பாஸ் கூறினார்.