• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீன-தென் கொரிய அரசுத் தலைவர்கள் தொலைபேசியில் உரையாடல்
  2014-04-23 17:24:43  cri எழுத்தின் அளவு:  A A A   
சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் அழைப்பை ஏற்று தென் கொரிய அரசுத் தலைவர் பாக் குயன்ஹேவுடன் 23ஆம் நாள் முற்பகல் தொலைபேசி மூலம் உரையாடினார்.
இருநாட்டுறவு, கொரிய தீபகற்ப நிலைமை ஆகியவை பற்றி அவர்கள் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.

மேலும், தென் கொரியாவின் செவோல் பயணியர் கப்பல் விபத்துக்குள்ளானதற்கு ஷிச்சின்பிங் மனவருத்தம் தெரிவித்தார். இவ்விபத்தில் உயிரிழந்தோருக்கு இரங்கலும் பாதிக்கப்பட்டோருக்கு ஆறுதலும் தெரிவிப்பதாக அவர் கூறினார்.

தென் கொரியாவுக்கு உதவியளிக்கும் சீனாவுக்கு நன்றி தெரிவித்ததோடு, இவ்விபத்தில் உயிரிழந்த சீனர்களுக்கு பாக் குயன்ஹே இரங்கல் தெரிவித்தார்.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040