• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
செவோல் எனும் கப்பலின் பணியாளர்கள் கைது
  2014-04-23 18:22:01  cri எழுத்தின் அளவு:  A A A   
செவோல் எனும் கப்பல் கடலில் மூழ்கிய விபத்து நிகழ்ந்து 8 நாட்கள் ஆகிவிட்டன. ஏப்ரல் 23ஆம் நாள் முற்பகல் வரை, அவ்விபத்தில் பலி எண்ணிக்கை 150ஆக உயர்ந்துள்ளது. 152 பேரை இன்னும் காணவில்லை. பலியானோரின் குடும்பத்தினருக்கு உதவியளிக்க, மீட்புதவி வரவு செலவை முன்னதாகவே பயன்படுத்த தென் கொரியா அரசு அன்று முடிவு செய்தது.

இதுவரை, அக்கப்பலின் 15 பணியாளர்களில் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் பெரும்பாலோர் செய்த தவறுகளை ஏற்றுகொண்டுள்ளனர் என்று தென் கொரியாவின் கே பி ஏஸ் வானொலி நிலையம் தெரிவித்தது.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040