பாலஸ்தீனத்தின் இருப் பிரிவுகளுக்கிடை இணக்கத்தில் காணப்பட்டுள்ள முன்னேற்றத்துக்கு சீனா வரவேற்பையும் வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளது. பாலஸ்தீன-இஸ்ரேல் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு ஊக்கத்தையும் ஆதரவையும் சர்வதேச சமூகம் வழங்க வேண்டும். சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் சின்காங் 24ஆம் நாள் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் இதைத் தெரிவித்தார்.
பாலஸ்தீனத்தின் இருப் பிரிவுகளுக்கிடை ஒற்றுமை, சுதந்திரமான பாலஸ்தீன நாடு உருவாக்கம், பாலஸ்தீன-இஸ்ரேல் அமைதியான சக வாழ்வு ஆகியவற்றுக்கு இந்த முன்னேற்றம் துணைபுரியும். மேலும் பாலஸ்தீன-இஸ்ரேல் அமைதி முழுமையாக நனவாவதற்கு அமைதிப் பேச்சுவார்த்தை தான் ஒரேயொரு வழிமுறை என்று சீனா எப்போதும் கருதுவதாக சின்காங் குறிப்பிட்டார்.