ஜப்பானிய தலைமையமைச்சர் ஷின்சோ அபே, அமெரிக்க அரசுத் தலைவர் பராக் ஒபாமாவுடன் ஏப்ரல் 24ஆம் நாள் டோக்கியோவில் பேச்சுவார்த்தையை நடத்தினார். ஜப்பான்-அமெரிக்கக் கூட்டணியை ஆழமாக்குவது, டி.பி.பி என்னும் பசிபிக் கடந்த செயல்நோக்குப் பொருளாதாரக் கூட்டாளியுறவு பற்றிய உடன்படிக்கை, ஆசிய-பசிபிக் பிரதேச மற்றும் உக்ரேன் சூழ்நிலை முதலியவை குறித்து, அவர்கள் கருத்துக்களைப் பரிமாற்றிக் கொண்டனர்.
ஆனால், பசிபிக் கடந்த செயல்நோக்குப் பொருளாதாரக் கூட்டாளியுறவு பற்றிய உடன்படிக்கை குறித்த இரு நாட்டுப் பேச்சுவார்த்தை தேக்க நிலையில் இருப்பதால், அது தொடர்பான கூட்டறிக்கை வெளியாகவில்லை.