அர்ஜென்டீனா நாட்டில் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங்கவும் அந்நாட்டின் அரசுத் தலைவர் கிரிஸ்டீனா அம்மையாரும் ஜுலை 18ஆம் நாள் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இரு நாட்டுறவு, பொது அக்கறை வாய்ந்த விவகாரங்கள் உள்ளிட்டவை பற்றி இரு தரப்பினரும் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டு, முக்கியமான கருத்தொற்றுமையை உருவாக்கியுள்ளனர்.
பேச்சுவார்த்தை நடைபெற்ற பின், இரு நாடுகளிடையேயான பன்முக நெடுநோக்குக் கூட்டாளியுறவை அமைக்கும் கூட்டறிக்கை வெளியாகியுள்ளது. பொருளாதாரம் மற்றும் முதலீடு ஒத்துழைப்பு உடன்படிக்கை, இரு தரப்பு நாணயப் பரிமாற்றம் பற்றிய ஒப்பந்தம் உள்பட பல ஆவணங்களில் இரு தரப்பும் கையெழுத்திட்டுள்ளன.