அதே நாள், ரஷிய வெளியுறவு அமைச்சர் ராவ்ரோவ் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் கேர்ரியுடன் தொலைபேசி மூலம் உக்ரேன் நிலைமை பற்றி விவாதித்தார். உக்ரேன் நெருக்கடியைத் தீர்க்க, அவசர நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்பதில் இரு தரப்பினரும் இசைந்துள்ளனர். மேலும், மலேசிய எம்எச் 17விமான விபத்து பற்றி நியாயமான சுதந்திரமான வெளிப்படையான சர்வதேச புலனாய்வை மேற்கொள்ள வேண்டும். விமான கருப்புப் பெட்டி உள்பட அனைத்து சான்றுகளை சர்வதேச புலனாய்வுக் கட்டுக்கோப்பில் வைத்து கொண்டு ஆய்வு செய்ய வேண்டும் என்றும் அவர்கள் ஆதரித்தனர்.