• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
மலேசிய எம்எச்17 விமான விபத்தின் புலனாய்வு பற்றிய கலந்தாய்வு
  2014-07-20 16:25:07  cri எழுத்தின் அளவு:  A A A   

மலேசிய எம்எச்17 விமான விபத்து பற்றி பல்வேறு தரப்புகள் கலந்தாய்வைத் தொடர்ந்துள்ளன. தற்போது, டோனேஸ்கோ மாநிலத்தைச் சேர்ந்த சுமார் 50 சட்ட மருத்துவர்கள் விபத்தின் இடத்தில் பணிபுரிந்துள்ளனர். ஐரோப்பியப் பாதுபாப்பு மற்றும் ஒத்துழைப்பு அமைப்பின் பிரதிநிதிக் குழு 19ஆம் நாள் அங்கு வந்து உள்ளூர் மக்கள், மீட்புப் பணியாளர் மற்றும் மருத்துவர்களுடன் உரையாடி விபத்து தொடர்பான தகவல்களைக் கேட்டறிந்துள்ளது.

அதே நாள், ரஷிய வெளியுறவு அமைச்சர் ராவ்ரோவ் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் கேர்ரியுடன் தொலைபேசி மூலம் உக்ரேன் நிலைமை பற்றி விவாதித்தார். உக்ரேன் நெருக்கடியைத் தீர்க்க, அவசர நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்பதில் இரு தரப்பினரும் இசைந்துள்ளனர். மேலும், மலேசிய எம்எச் 17விமான விபத்து பற்றி நியாயமான சுதந்திரமான வெளிப்படையான சர்வதேச புலனாய்வை மேற்கொள்ள வேண்டும். விமான கருப்புப் பெட்டி உள்பட அனைத்து சான்றுகளை சர்வதேச புலனாய்வுக் கட்டுக்கோப்பில் வைத்து கொண்டு ஆய்வு செய்ய வேண்டும் என்றும் அவர்கள் ஆதரித்தனர்.

1 2
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040