• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஆசியக் கோப்பை கூடைப்பந்து
  2014-07-21 11:14:21  cri எழுத்தின் அளவு:  A A A   
ஆசியக் கோப்பை கூடைப்பந்து போட்டியில் சிங்கப்பூரை வீழ்த்திய இந்திய அணி 7வது இடத்தைப் பிடித்தது.
சீனாவின் உகான் நகரில் 5வது ஆசியக் கோப்பை கூடைப்பந்து போட்டி நடைபெற்று வருகிறது. காலிறுதியில் பிலிப்பைன்ஸிடம் தோல்வியடைந்த இந்திய அணி, 7வது இடத்துக்கான ஆட்டத்தில் சிங்கப்பூரை எதிர்கொண்டது. ஆட்டம் தொடங்கியதில் இருந்தே அபாரமாக ஆடிய இந்திய வீரர்கள் முதல் பாதியில் 49-13 என முன்னிலை பெற்றனர். இரண்டாவது பாதியிலும் இந்தியாவின் ஆதிக்கம் தொடர்ந்து, முடிவில் 85-36 என்ற புள்ளிக் கணக்கில் இந்திய அணி வெற்றி பெற்றது. இந்திய அணியில் அம்ஜோத் சிங் அதிகபட்சமாக 30 புள்ளிகளும், அமிர்தபால் சிங் 13 புள்ளிகளும் பெற்றனர்.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040