பாலஸ்தீனமும் இஸ்ரேலும் முன்நிபந்தனையின்றி உடனடியாக சண்டையை நிறுத்தி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். ஐ﹒நா தலைமை செயலாளர் பான்கிமுன் எகிப்தின் வெளியுறவு அமைச்சர் சாமேஹ் சோக்ரியுடன் 21ஆம் நாள் கைரோவில் நடத்திய கூட்டுச் செய்தியாளர் கூட்டத்தில் இவ்வாறு கேட்டுக்கொண்டார்.
இரண்டு வாரங்களாக நீடிக்கும் இரு தரப்பின் மோதலில் அப்பாவி மக்கள் பலர் உயிரிழந்தனர். இது ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது. தொடர்புடயை தரப்புகள் வன்முறையை உடனடியாக நிறுத்தி மனித நேய உதவிக்கு வசதி செய்து தர வேண்டும் என்றும் பான்கிமூன் தெரிவித்தார்.