இந்தியா மேற்கொண்டுள்ள முதலாவது செவ்வாய் கிரகப் பயணத்தில் சுமார் 80விழுக்காடு முடிவடைந்துள்ளது என்று இந்திய விண்வெளி ஆய்வு அமைப்பு ஜுலை 22ஆம் நாள் அறிவித்தது.
கடந்த ஆண்டு நவம்பர் திங்கள் ஆரம்பிக்கப்பட்ட இந்த பயணத்தில் செவ்வாய் கோளுக்கு செல்லும் விண்கலம் 54கோடி கிலோமீட்டர் பயணித்துள்ளது. திட்டமிடப்படி செப்டம்பர் 24ஆம் நாள் செவ்வாய் கிரகம் சென்றடையும் என்று தெரிகிறது.