சீன அரசுத் தலைவர் ஷீ ச்சின்பிங், கியூபா அரசவையின் தலைவரும், அமைச்சர்கள் கூட்டத்தின் தலைவருமான ராவுல் காஸ்ட்ரோவுடன் ஜூலை 22ஆம் நாள் ஹவானாவில் பேச்சுவார்த்தை நடத்தினார். நட்புப்பூர்வமான நேர்மையான சூழ்நிலையில், இரு நாட்டுத் தலைவர்கள், சீன-கியூபா உறவின் வளர்ச்சியை மீட்டாய்வு செய்து, இரு நாட்டுறவின் எதிர்காலத்தை தீர்மானித்து, முக்கிய பொது கருத்துக்களை உருவாக்கினர்.
மேலும், பொருளாதார மற்றும் வர்த்தகம், வேளாண் துறை, எரியாற்றல், சுகாதாரம், பண்பாடு, கல்வி உள்பட பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பு ஆவணங்களின் கையொப்பமிடும் விழாவில் அவர்கள் கலந்து கொண்டனர்.