இவ்வாண்டு ஜுலை திங்கள் வரை கடந்த 12 திங்களில் உலகளவில் மொத்தம் 18668 பேர் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தனர். இவ்வெண்ணிக்கை கடந்த 5 ஆண்டுக்காலத்தின் சராசரி எண்ணிக்கையை விட 30 விழுக்காடு அதிகமாகும் என்று உலகில் புகழ் பெற்ற இடர்பாடு மதிப்பீட்டுத் தொழில் நிறுவனமான மெப்லக்ரொஃப்ட் 23ஆம் நாள் வெளியிட்ட தரவுகள் காட்டின.
இத்தொழில் நிறுவனத்தின் பயங்கரவாத மற்றும் பாதுகாப்புக் கட்டுப்பாட்டக தகவலின் படி, பயங்கரவாத தாக்குதல் ஆபத்து மிகவும் அதிகமான பிரதேசப் பட்டியலில் 12 நாடுகள் இடம் பெறுகின்றன. அவற்றில் ஈராக் முதலிடம் வகிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.