உக்ரைன் தலைமை அமைச்சர் சேனி யாட்செநியூக் 24ஆம் நாள் நாடாளுமன்றத்திடம் விலகல் கடிதத்தை வழங்கி, ஆளும் கூட்டணி கலைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். அந்நாட்டின் அமைச்சரவை 25ஆம் நாள் க்ரோய்ஸ்மன்னை தற்காலிக தலைமை அமைச்சராக பரிந்துரை செய்தது.
25ஆம் நாள் உக்ரைனின் 40க்கு மேற்பட்ட பீரங்கிக் குண்டுகள் ரஷியாவின் தென் மேற்கு எல்லை பகுதியில் விழுந்தன என்று ரஷிய புலனாய்வு வாரியம் மற்றும் பாதுகாப்பு வாரியத்தின் அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.
அதேநாள், உக்ரைன் பிரச்சினை தொடர்பான புதிய தடை நடவடிக்கையை மேற்கொள்வதாக ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்தது. 15 தனிநபர் மற்றும் 18 நிறுவனங்கள் புதிய இலக்குகளாக இத்தடை நடவடிக்கையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.