• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
பாலஸ்தீனம்-இஸ்ரேல் நீண்டகால போர் நிறுத்த உடன்படிக்கைக்கு முயற்சிகள்
  2014-07-27 18:47:01  cri எழுத்தின் அளவு:  A A A   

பாலஸ்தீனமும் இஸ்ரேலும் 12 மணி நேரம் தொடரும் மனித நேய போர் நிறுத்த ஆலோசனையை ஏற்றுக்கொண்ட பின், ஜுலை 26-ஆம் நாள் காலை, பிரான்ஸ், அமெரிக்கா, துருக்கி, கத்தார், பிரிட்டன், ஜெர்மனி, இத்தாலி ஆகிய ஏழு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதி பாரிஸில் பேச்சுவார்த்தை நடத்தினர். பாலஸ்தீனத்துக்கும் இஸ்ரேலுக்கும் இடையே நீண்டகாலப் போர் நிறுத்தம், இரு நாட்டு அமைதி பேச்சுவார்த்தையை முன்னேற்றுவது ஆகியவை குறித்து அவர்கள் கலந்தாய்வு நடத்தினர்.

2 மணிநேரம் தொடர்ந்த இப்பேச்சுவார்த்தைக்குப் பின், பிராஞ்சு வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், காசா பிரதேசத்தில் வெகுவரைவில் ரத்தம் சிந்தும் மோதலை நிறுத்துவது, தற்போதைய அவசர கடமையாகும் என்று தெரிவிக்கப்பட்டது.

இதனிடையில், பாலஸ்தீனருக்கு ஆதரவு தெரிவிக்கும் ஆர்ப்பாட்டம் ஜுலை 19, 23 ஆகிய இரு நாட்களில் பாரிஸ் நகரில் நடந்தது. 26-ஆம் நாள் பல்லாயிரம் மக்கள், புதிய சுற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040