• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
புதிதாக உருவாக்கப்படும் தொழில்நிறுவங்களுக்கு நியாயமான நிலைமையை அளிக்க வேண்டும்
  2014-07-28 09:23:31  cri எழுத்தின் அளவு:  A A A   

புதிதாகப் பதிவு செய்துள்ள தொழில்நிறுவனத் தலைவர்களுடன் கலந்துரையாடல் கூட்டத்தை சீனத் தலைமை அமைச்சர் லீ க்கே ச்சியாங் அண்மையில் நடத்தினார். புதிய தொழில்நிறுவனங்கள் நியாயமான சந்தைப் போட்டியில் வளர்க்கச் செய்ய வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

அரசு வாரியங்களின் நிர்வாகச் செயல்பாடுகளை ஒழுங்கமைத்து குறைத்து, மேலதிக இயக்க மற்றும் மேலாண்மை உரிமைகளைத் தொழில்நிறுவனங்களுக்கு அளிக்கும் கொள்கை நடைமுறைக்கு வந்த பிறகு, சீனாவில் புதிதாகப் பதிவு செய்துள்ள தொழில்நிறுவனங்கள் பெரிதாக அதிகரித்துள்ளன. இவ்வாண்டின் முதல் 6 திங்களில், புதிதாகப் பதிவு செய்த தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கை 16 இலட்சத்து 80 ஆயிரமாகும். கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட அது 57 விழுக்காடு அதிகமாகும். முதல் அரையாண்டில் பொருளாதாரம் அதிகரிக்கும் வேகம் குறைந்த நேரத்தில், பொருளாதாரம் தொடர்ந்து நிதானமாக இயங்கி, புதிகாக அதிகரிக்கும் வேலை வாய்ப்பு கடந்த ஆண்டில் இருந்ததைத் தாண்டியுள்ளது. இதற்குக் காரணம் அக்கொள்கையும் தொடர்புடைய சீர்திருத்தமும் முக்கிய ஆதரவளித்துள்ளன.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040