உக்ரைனின் மோதலுக்குள்ளான பகுதிகளில் உடனடியாக போர்நிறுத்தம் நனவாக்க வேண்டும். ரஷிய வெளியுறவு அமைச்சர் சேர்ஜி லாவ்ரோவும் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரியும் ஜுலை 27ஆம் நாள் தொலைபேசியில் பேசியபோது உக்ரைன் பிரச்சினை குறித்து இதைத் தெரிவித்துள்ளனர்.
மோதலுக்குள்ளான பகுதிகளில் போர் நிறுத்தம் அடையும் அதேவேளையில், ரஷியா, அமெரிக்கா, உக்ரைன், ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய நான்கு தரப்புகள் ஏப்ரல் 17ஆம் நாள் உருவாக்கிய ஜெனீவா உடன்படிக்கைக்கு இணங்க செயல்பட வேண்டும். மேலும், பல்வேறு தரப்புப் பேச்சுவார்த்தை தொடங்க வேண்டும் என்று லாவ்ரோவும் கெர்ரியும் கூறியுள்ளனர்.