அல்ஜீரிய விமான விபத்தில் உயிரிழந்தோரின் பூத உடல் எங்கே அனுப்பப்படுவது குறித்து, அல்ஜீரிய வெளியுறவு அமைச்சகமும் பிரான்ஸும் விவாதம் நடத்தி வருகிறது. அல்ஜீரிய அரசு செய்தி ஊடகம் 27ஆம் நாள் இதை அறிவித்தது.
பிரான்ஸ் அரசுத் தலைவர் ஓலெந்த் விபத்தில் உயிரிழந்த பிரான்ஸ் பயணிகளின் குடும்பத்தினரைச் சந்தித்த போது பேசுகையில், விபத்தில் உயிரிழந்த அனைவரின் பூத உடல் பிரான்ஸுக்கு அனுப்பி புலனாய்வு செய்யப்படும் என்றார். ஆனால், அல்ஜீரிய மதப் பழக்கப்படி, மனிதர் உயிரிழந்த பிறகு கூடிய விரைவில் ஊருக்கு அனுப்பி பூதவுடலை புதைக்க வேண்டும்.
இவ்விபத்துக்கான புலனாய்வை, அல்ஜீரியா, மாலி, புகினாஃபசொ, பிரான்ஸ், அமெரிக்கா, ஸ்பெயின் ஆகிய தரப்புகளும் கூட்டாக மேற்கொள்ளும் என்று அல்ஜீரிய தலைமையமைச்சர் 26ஆம் நாள் தெரிவித்தார்.