கிளை நிறுவனமான ஷாங்காய் ஓ எஸ் ஐ தொழில் நிறுவனம் உற்பத்தி செய்த அனைத்து பொருட்களையும் திருப்பி பெற்றுக்கொள்வதாகவும், தற்கால மற்றும் முன்னாள் உயர் நிலை அதிகாரிகள் கடமை புரியத் தவறிய செயல்களை உட்புறத்தில் புலனாய்வு செய்வதாகவும் அமெரிக்க ஓ எஸ் ஐ குழுமம் அண்மையில் அறிவித்துள்ளது. இதைத் தவிர, சீனாவிலுள்ள கிளை தொழில் நிறுவனத்துக்கு புதிய நிர்வாகக் குழுவை அனுப்பும்.
அதே வேளை சீனாவிலுள்ள அலுவல்கள், அக்குழுமத்தின் சர்வதேச நிர்வாகக் குழுவுக்கு ஒப்படைக்கப்பட்டு, சர்வதேச வரையறை படி கண்டிப்பான முறையில் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.