• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
அப்பாவி மக்களின் வாகனம் மீதான தாக்குதலில் 16 பேர் பலி
  2014-07-28 19:12:37  cri எழுத்தின் அளவு:  A A A   
அரசுக்கு எதிரான அபு ஸய்யாஃப் ஆயுதப்படை 28ஆம் நாள் காலை பிலிப்பைன்ஸின் தென் பகுதியிலுள்ள சூலு மாநிலத்தில் அப்பாவி மக்களின் வாகனங்களைத் தாக்கியது. அதில் குறைந்தது 16 பேர் உயிரிழந்தனர். 13 பேர் காயமுற்றனர் என்று பிலிப்பைன்ஸ் இராணுவம் கூறியது.

காலை 8:30 மணிக்கு சுமார் 50 பொது மக்கள் வாகனங்களின் மூலம் ரம்சான் விழா கொண்டாட்டத்தில் கலந்து கொள்ளும் வழியில் தாக்கப்பட்டனர். உயிரிழந்தோர் மற்றும் காயமுற்றோரில் மகளிர்களும் குழந்தைகளும் அடங்குவர் என்று பிலிப்பைன்ஸ் கடற்படையின் ஆணையாளர் ஒருவர் கூறினார்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040