சீன அரசுத் தலைவர் ஷீ ச்சின்பிங் ஆகஸ்ட் 21, 22 ஆகிய நாட்களில் மங்கோலிய நாட்டில் அரசு முறை பயணம் மேற்கொள்வார். கடந்த 11 ஆண்டுக்காலத்தில், சீன அரசுத் தலைவர் மங்கோலியாவில் மீண்டும் பயணம் மேற்கொள்வது இது முதன்முறை. ஷீ ச்சின்பிங் அரசுத் தலைவராக பதவி ஏற்ற பின் மங்கோலியாவில் மேற்கொள்ளும் முதல் பயணம் இது. எனவே, இப்பயணத்தில் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இரண்டு நாட்கள் நீடிக்கும் பயணத்தில், ஷீ ச்சின்பிங் மங்கோலிய அரசியலாளர்களைச் சந்தித்து, உரை நிகழ்த்தி, பொருளாதார வர்த்தக நடவடிக்கைகளில் கலந்து கொள்வார்.