கடந்த பல ஆண்டுகளில் நடுவண் அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு, திபெத் வளர்ச்சிக்கு உதவி அளித்து வருகின்றது. திபெத் பல்கலைக்கழக மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு அளிப்பது, இந்த நடவடிக்கைகளில் ஒன்றாகும்.
புள்ளிவிபரங்களின் படி 2012ஆம் ஆண்டு பிப்ரவரி திங்கள், இந்நடவடிக்கை அதிகாரபூர்வமாக துவங்கியது. கடந்த 2 ஆண்டுகளில், திபெத் தன்னாட்சி பிரதேசத்துக்கு உதவி அளித்த மாநிலங்களும் தொழில் நிறுவனங்களும் 17 ஆயிரம் வேலை வாய்ப்புகளை வினியோகித்தன. பட்டம் பெற்ற 2800 திபெத் பல்கலைக்கழக மாணவர்கள் திபெத் வெளியே வேலை செய்கின்றனர்.