இந்தியச் செய்தி ஊடகங்களின்படி, சீனப் படை 17ஆம் நாள் இந்திய எல்லையில் நுழைந்துள்ளது. இது உண்மையா இல்லையா என்று கேட்கப்பட்ட போது, இந்திய ராணுவ தலைமைத் தளபதியும் தரைப்படை முதன்மை தலைவருமான தல்பீர் சிங் உறுதியாக மறுத்தார். சில செய்தி ஊடகங்களில் செய்தி உண்மைக்கு முழுமையாகப் புறம்பானது. இது போல ஏதுவும் இல்லை என்று அவர் தெரிவித்தார்.
இந்திய ராணுவத்தின் மற்றொரு செய்தித் தொடர்பாளரும் ஊடகங்களின் செய்தியை மறுத்தார். இரு நாடுகளுக்குமிடையே உள்ள எல்லை விவகாரங்கள் குறித்து, இந்தியாவும் சீனாவும் தூதாண்மை மற்றும் ராணுவக் கலந்தாய்வு வழிமுறை மூலம் விவாதிப்பதாக அவர் கூறினார்.