மைக்கேல் பிரௌன் என்னும் இளைஞர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்
2014-08-21 10:42:24 cri எழுத்தின் அளவு: A A A
மைக்கேல் பிரௌன் என்னும் கறுப்பின இளைஞர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து புலனாய்வு செய்ய, அமெரிக்கச் சட்ட நீதி துறை அமைச்சர் எரிக் ஹோல்டர் ஆகஸ்டு 20ஆம் நாள் மிசூரி மாநிலத்தின் செயின்ட் லூயிஸ் நகரைச் சேர்ந்த பெர்குசன் மாவட்டத்தைச் சென்றடைந்தார். பன்முக, நியாயமான, வெளிப்படையான, சுதந்திரமான புலனாய்வு செய்ய வேண்டும் என்று அவர் உறுதி கூறினார். அதே நாள், உள்ளூர் அரசு வழக்கறிஞர் மன்றம் இவ்வழக்கு பற்றிய சான்றுகளை நடுவர் குழுவிடம் வெளியிட்டுள்ளது.
உங்கள் கருத்தை பதிவு செய்ய