இந்தியாவுக்கு எதிரான நட்பு ரீதியிலான கால்பந்து தொடரின் 2-வது ஆட்டத்தில் 2-0 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தான் வெற்றி பெற்றது. முதல் ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெற்றிருந்ததால் இந்த தொடர் 1-1 என சமன் ஆனது.
ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்குத் தயாராகும் விதமாக பெங்களூருவில் இந்தத் தொடர் நடைபெற்றது. இதில் இரு அணிகளின் 23-வயதுக்கு உள்பட்ட வீரர்கள் பங்கேற்றனர். இருப்பினும், ஒவ்வொரு அணியிலும் மூன்று மூத்த வீரர்கள் விளையாட அனுமதிக்கப்பட்டிருந்தது.