உக்ரைனின் கிழக்குப் பகுதிக்கு மனித நேய மீட்புதவிப் பொருட்களை ஏற்றிச்செல்லும் ரஷிய வாகன அணி 21ஆம் நாள் பிற்பகல் எல்லை பரிசோதனை சாவடிக்குச் சென்றடைந்து, சுங்க நடைமுறை கையாள்கின்றது. ஒரு பகுதி சரக்குந்துகள் ரஷிய தரப்பு சுங்கத் துறை பரிசோதனை நடைமுறைகளை நிறைவேற்றியுள்ளன என்று ரஷிய செய்தி ஊடகங்கள் அறிவித்தன.
தவிர, உக்ரைன் சுங்கத்துறைப் பணியாளர்கள் 21ஆம் நாள் பிற்பகல், ரஷியாவின் மனித நேய வாகனங்களுக்கு சுங்க நடைமுறை கையாண்டுள்ளதாக உக்ரைன் தேசிய பாதுகாப்புக் குழுவும், எல்லைப் பாதுகாப்பு அலுவலகமும் அன்று தகவல் வெளியிட்டு உறுதிப்படுத்தின.