இவ்வாண்டு ஏப்ரல் திங்களில், ஜப்பானின் ஒரு கோயிலில், 2வது உலக போரில் ஜப்பானிய குற்றவாளிகளுக்கு இரங்கல் தெரிவித்தது. இந்த குற்றவாளிகள், உயிரை கொடுத்து, ஜப்பான் வளர்ச்சியின் அடிப்படையை உருவாக்கினர் என்று ஜப்பானிய தலைமை அமைச்சர் அபேசின்சோ தெரிவித்தார்.
இது குறித்து, சீன வெளியுறவு அமைச்சின் செய்திதொடர்பாளர் சின் காங் பேசுகையில், ஜப்பான், ஆக்கிரமிப்பு வரலாற்றை சரியாக கருதி, நடைமுறை நடவடிக்கை மேற்கொண்டு அண்டை நாடுகள் மற்றும் சர்வதேச சமூகத்தின் நம்பிக்கையை பெற வேண்டும் என்று சீனா வேண்டுகோள் விடுப்பதாக கூறினார்.