சீன மக்கள் விடுதலைப்படையின் இராணுவ மருத்துவ அறிவியல் கழகத்தைச் சேர்ந்த உயிரின தொற்று நோய் ஆய்வகம், கடந்த 5 ஆண்டுகளில் எபோலா கிருமி தடுப்புக்கான ஜெ.கே-05 எனும் மருந்தை ஆராய்ந்து தயாரித்து கொண்டிருந்தது. அண்மையில், நிபுணரின் பரிசோதனையின்படி, இராணுவப்படைக்கு வழங்கும் சிறப்பு மருந்துகளில் ஒன்றாக ஏற்றுக்கொள்ளப்பட்டது இது. சீனாவில் எபோலா கிருமி தடுப்புக்காக ஏற்றுக்கொள்ளப்பட்ட முதல் மருந்து இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
அதற்கு முன் எபோலா கிருமியின் நியூக்ளிக் அமிலத்தை பரிசோதனை செய்வதற்காக சீனாவால் வெற்றிகரமாக ஆராய்ந்து தயாரிக்கப்பட்ட பொருள், இம்மருந்து ஆகியவை, சீனாவின் எபோலா நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுக்கு தீர்க்கமான தொழில் நுட்ப ஆதரவுகளை வழங்கும்.