ஈரான் வெளியுறவு அமைச்சர் ஜவாட் ஸரிஃப் செப்டெம்பர் முதல் நாள் பெல்ஜியம் நாட்டின் தலைநகர் பிரசல்ஸ் சென்றடைந்து, ஐரோப்பிய ஒன்றிம் மற்றும் பெல்ஜியம் நாட்டின் உயர் அதிகாரிகளைச் சந்தித்து, ஈரான் அணு பிரச்சினை குறித்து அவர்களுடன் விவாதம் நடத்தினார்.
விரைவில் நடைபெறும் பேச்சுவார்த்தையில் பன்முக அணு உடன்படிக்கையை உருவாக்குவது என்பது, ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதாண்மை மற்றும் பாதுகாப்பு கொள்கைக்கான உயர் பிரதிநிதி கேதரின் அஷ்டன் அம்மையாருடன் ஸரிஃப் நடத்திய பேச்சுவார்த்தையின் முக்கிய விவாத அம்சமாகும்.
பதவியிலிருந்து விலகும் ஐரோப்பிய பேரவைத் தலைவர் ஹெர்மன் வன் ரோம்புய்யை அவர் சந்தித்துரையாடினார். ஈரான் அணு பிரச்சினை மட்டுமல்ல, மத்திய கிழக்கு பிரதேசத்திலான பயங்கரவாத மற்றும் அதிதீவிரவாத சக்திகளின் வளர்ச்சியை ஒடுக்குவதும் பற்றி அவர்கள் விவாதம் நடத்தினர்.