• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஐ எஸ் ஐ எஸ் மனித உரிமையை மீறியதற்கு ஐ.நா கண்டனம்
  2014-09-02 09:48:10  cri எழுத்தின் அளவு:  A A A   

தீவிரவாத அமைப்பான ஐ எஸ் ஐ எஸ் மற்றும் தொடர்பான பயங்கரவாத குழுகள் ஈராக்கில் செயல்படுத்தியுள்ள பயங்கரவாத செயல்களை ஐ.நா கடுமையான கண்டனம் தெரிவிக்கிறது. அத்துடன் ஈராக்கில் புலனாய்வு செய்ய, ஐ.நா மனித உரிமை விவகாரத்திற்குப் பொறுப்பான உயர் நிலை பிரதிநிதி அலுவலகம் உடனடியாக புலனாய்வு குழு ஒன்றை அனுப்ப வேண்டும் என்று ஐ.நா மனித உரிமை செயல் குழு கேட்டுக் கொண்டுள்ளது. ஐ.நா மனித உரிமை செயல் குழு செப்டம்பர் முதல் நாள் நிறைவேற்றியுள்ள தீர்மானம் இவ்வாறு தெரிவித்தது.

சில மதங்கள், சிறுப்பான்மை இன மக்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு அந்த தீவிரவாத அமைப்புகள் செயல்படுத்தியுள்ள வன்முறை நடவடிக்கைகளை அத்தீர்மானம் கடுமையாக கண்டித்துள்ளது.

இவ்வாண்டின் ஜூன் திங்கள் முதல், ஈராக்கில் கடுமையான ஆயுத மோதல் நிகழ்ந்துள்ளது. தீவிரவாத அமைப்பான ஐ எஸ் ஐ எஸ் உள்ளிட்ட அரசு எதிர்ப்பு ஆயுத அமைப்புகள் ஈராக்கின் வட மற்றும் மேற்கு பகுதிகளைக் கைபற்றின.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040