சீன அரசுத் தலைவரின் சிறப்பு தூதரும், சீனத் துணை வெளியுறவு அமைச்சருமான ட்சாங் யேசூய் செப்டம்பர் முதல் நாள் சமோயாவில் நடைபெற்ற 3வது சி்றிய தீவு வளரும் நாடுகளின் சர்வதேசக் கூட்டத்தில் கலந்து கொண்டு, உரை நிகழ்த்தினார். சிறிய தீவு நாடுகள் தொடரவல்ல வளர்ச்சியை நிறைவேற்றுவதற்கு உதவியளிக்குமாறு அவர் சர்வதேசச் சமூகத்துக்கு வேண்டுக்கோள் விடுத்தார்.
சிறிய தீவு நாட்டு வளர்ச்சியின் இன்னல்களைச் சீனா ஆழமாகப் புரிந்து கொண்டு வருகிறது. அந்த நாடுகளுடன் ஒத்துழைப்பு உறவைத் தொடர்ந்து ஆழமாக்கி, நடைமுறை நடவடிக்கைகள் மூலம், சிறிய தீவு நாடுகளின் மனமார்ந்த நீண்டகால நம்பகமான கூட்டாளியாக விளங்க சீனா விரும்புவதாக ட்சாங் யேசூய் தெரிவித்தார்.