இதனிடையில், உக்ரைன் பிரச்சினை தொடர்பான முத்தரப்பு தொடர்பு குழு பெலாரஸின் தலைநகர் மின்ஸ்கில் கூட்டம் நடத்தியது. மோதலில் சிக்கியுள்ள இருதரப்புகள் ஒன்றுக்கொன்று கைதிகளைப் பரிமாற்றம் செய்வது, மனிதநேய உதவிக்கு உத்தரவாதம் அளிப்பது உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து கூட்டத்தில் கலந்து கொண்ட பிரதிநிதிகள் முக்கியமாக விவாதித்தனர். மேலும், இக்குழுவின் அடுத்த கூட்டம் செப்டெம்பர் 5ஆம் நாள் மின்க்ஸில் நடைபெற உள்ளது என்று தெரிகிறது.