• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
உக்ரைன் கிழக்கில் பயங்கரவாத எதிர்ப்பு முடிவு
  2014-09-02 10:01:10  cri எழுத்தின் அளவு:  A A A   
பயங்கரவாதிகளின் கைகளிலிருந்து உக்ரைனின் கிழக்கு பகுதியை விடுதலை செய்யும் நடவடிக்கை முடிவடைந்துள்ளது. தற்போது, ரஷியாவை எதிர்த்துப் போராடும் பணியை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று உக்ரைன் தேசிய பாதுகாப்பு அமைச்சர் வலேரி கலேதெய் செப்டெம்பர் முதல் நாள் கூறினார்.

இதனிடையில், உக்ரைன் பிரச்சினை தொடர்பான முத்தரப்பு தொடர்பு குழு பெலாரஸின் தலைநகர் மின்ஸ்கில் கூட்டம் நடத்தியது. மோதலில் சிக்கியுள்ள இருதரப்புகள் ஒன்றுக்கொன்று கைதிகளைப் பரிமாற்றம் செய்வது, மனிதநேய உதவிக்கு உத்தரவாதம் அளிப்பது உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து கூட்டத்தில் கலந்து கொண்ட பிரதிநிதிகள் முக்கியமாக விவாதித்தனர். மேலும், இக்குழுவின் அடுத்த கூட்டம் செப்டெம்பர் 5ஆம் நாள் மின்க்ஸில் நடைபெற உள்ளது என்று தெரிகிறது.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040