சீன அரசுத் தலைவர் ஷீ ச்சின் பிங், 17ஆம் நாள் கொழும்பில் இலங்கை நாடாளுமன்ற தலைவர் சாமல் ராஜாபக்சேவை சந்தித்துரையாடினார்.
இலங்கையை, நல்ல நண்பராக சீனா எப்போதுமே கருதுகிறது. தைவான், திபெத் ஆகிய பிரச்சினைகளில், இலங்கையின் நீண்டகாலமான ஆதரவுக்கு சீனா நன்றி தெரிவிக்கிறது என்று சந்திப்பில் ஷீ ச்சின் பிங் வலியுறுத்தினார்.
இலங்கையின் ஆக்கப்பணிக்கு சீனா அளித்த ஆதரவுக்கும் பங்குக்கும் இலங்கை நன்றி தெரிவிக்கிறது. இதிலிருந்து இலங்கை மக்கள் நலன் பெறுவர் என்று சாமல் தெரிவித்தார்.