ஐஎஸ் எனும் அதிதீவிர அமைப்பை இலக்காக கொண்டு அழிப்பதற்கு அமெரிக்கா தனது தரைப் படைப்பிரிவுகளை அனுப்பப் போவதில்லை என்று அமெரிக்க அரசுத் தலைவர் பராக் ஒபாமா 17ஆம் நாள் மீண்டும் வாக்குறுதி அளித்தார். அமெரிக்க படையின் தலைமையகத்தில் சோதனை பயணம் மேற்கொண்ட போது அவர் இதைத் தெரிவித்தார்.
அதேநாள், அமெரிக்க பிரதிநிதிகள் அவையில் சட்டத் திருத்தம் ஒன்று வாக்கெடுப்பு மூலம் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இதில், ஐஎஸ் எனும் அதிதீவிர அமைப்பை ஒடுக்கும் வகையில், சிரியா அரசுக்கு எதிரான மிதவாத ஆயுதக்குழுவுக்கு ஆயுதங்களையும் பயிற்சியையும் அளிக்க ஒபாமா அரசுக்கு இந்த சட்டத் திருத்தம் அனுமதி வழங்கியுள்ளது.