இந்தியாவில் பயணம் மேற்கொண்டிருக்கின்ற சீன இளைஞர் பிரதிநிதிக் குழு 17-ஆம் நாள் புதுதில்லியிலுள்ள இந்திய தொழில் நுட்ப நிர்வாக கழகத்தைச் பார்வையிட்டது. இக்கழகத்தின் தலைவர், ஆசிரியர் மற்றும் மாணவருடன் பிரதிநிதிக் குழு உறுப்பினர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இக்கழகத்தின் தலைவர் பிபெக் பேனர்ஜீ பேசுகையில், சீனாவும் இந்தியாவும், உலகப் பொருளாதாரத் துறையில் மிக முக்கிய இரு நாடுகளாக அமையும். இரு நாட்டுகளிடையே ஒன்றுக்கொன்று கற்றுக்கொள்வது முக்கியத்துவம் வாய்ந்தது. தனது கழகம், சீனத் தரப்புடன் மேலதிக பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்புகளை மேற்கொள்ள வேண்டும் என்றார் அவர்.
வணிக நிர்வாகத் துறைத் திறமைசாலிகளைப் பயிற்றுவிப்பதில் இந்திய தொழில் நுட்ப நிர்வாக கழகத்தின் அனுப்பவங்களைக் கற்றுக்கொள்ளும் ஆர்வம் சீனாவுக்கு மிக அதிகமாகும் என்று சீன இளைஞர் பிரதிநிதிக் குழுத் தலைவர் சோச்சாங்குவி தெரிவித்தார்.