• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
7வது மனித உரிமை கருத்தரங்கு பெய்ஜிங்கில் நிறைவு
  2014-09-18 15:00:27  cri எழுத்தின் அளவு:  A A A   
2 நாட்கள் தொடர்ந்த 7வது பெய்ஜிங் மனித உரிமை கருத்தரங்கு 18ஆம் நாள் சீனாவின் பெய்ஜிங் மாநகரில் நிறைவுற்றது.

சீன மனித உரிமை ஆய்வு சங்கத்தின் துணைத் தலைவர் யே சியௌவென் உரை நிகழ்த்துகையில், பெய்ஜிங் மனித உரிமை கருத்தரங்கை செவ்வனே பயன்படுத்தி, இதர நாடுகளுடன் பேச்சுவார்த்தையை வலுப்படுத்தி, சர்வதேச மனித உரிமை துறையின் வளர்ச்சியை முன்னேற்ற சீனா விரும்புகிறது என்று தெரிவித்தார்.

2008ஆம் ஆண்டு தொடங்கி இதுவரை பெய்ஜிங் மனித உரிமை கருத்தங்கு தொடர்ந்து 7 முறைகளில் வெற்றிகரமாக நடைபெற்றுள்ளது. ஒவ்வொரு கருத்தரங்கும் உள்நாடு மற்றும் வெளிநாடுகளின் அரசு அதிகாரிகள், நிபுணர்கள் மற்றும் அறிஞர்கள் பலரை ஈர்க்கிறது. உலகில் மனித உரிமை தொடர்பான பல தரப்பு கருத்தரங்கின் முன்மாதிரியாக அது போற்றப்படுகிறது என்று தெரிகிறது.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040