சீன மனித உரிமை ஆய்வு சங்கத்தின் துணைத் தலைவர் யே சியௌவென் உரை நிகழ்த்துகையில், பெய்ஜிங் மனித உரிமை கருத்தரங்கை செவ்வனே பயன்படுத்தி, இதர நாடுகளுடன் பேச்சுவார்த்தையை வலுப்படுத்தி, சர்வதேச மனித உரிமை துறையின் வளர்ச்சியை முன்னேற்ற சீனா விரும்புகிறது என்று தெரிவித்தார்.
2008ஆம் ஆண்டு தொடங்கி இதுவரை பெய்ஜிங் மனித உரிமை கருத்தங்கு தொடர்ந்து 7 முறைகளில் வெற்றிகரமாக நடைபெற்றுள்ளது. ஒவ்வொரு கருத்தரங்கும் உள்நாடு மற்றும் வெளிநாடுகளின் அரசு அதிகாரிகள், நிபுணர்கள் மற்றும் அறிஞர்கள் பலரை ஈர்க்கிறது. உலகில் மனித உரிமை தொடர்பான பல தரப்பு கருத்தரங்கின் முன்மாதிரியாக அது போற்றப்படுகிறது என்று தெரிகிறது.