• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீன-இந்திய உறவு உலகளவில் செல்வாக்கு மிக்கது
  2014-09-18 16:21:42  cri எழுத்தின் அளவு:  A A A   
இந்தியாவில் அரசு முறை பயணம் மேற்கொண்டிருக்கும் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் 18ஆம் நாள் புதுதில்லியில் இந்தியக் குடியரசுத் தலைவர் பிராணப் முகர்ச்சி நடத்திய பெரும் வரவேற்பு விழாவில் கலந்து கொண்டார்.

வரவேற்பு விழாவுக்குப் பின், ஷிச்சின்பிங் செய்தியாளர்களிடம் உரைநிகழ்த்தினார். அவர் கூறுகையில், சீனாவும் இந்தியாவும் பழமை நாகரிகம் கொண்ட நாடுகள், மிகப் பெரிய வளரும் நாடுகள் மற்றும் புதிதாக வளரும் நாடுகளாகும். உலக பலதுருவமயமாக்க முன்னேற்றப் போக்கில் முக்கியமான இரண்டு சக்திகளுமாகும். இரு நாட்டுறவு உலகளவில் செயல்நோக்கு மற்றும் செல்வாக்கு மிக்கது. இரு நாடுகளின் ஒத்துழைப்பும், கூட்டு வளர்ச்சியும் இரு நாடுகளிலுள்ள 250கோடி மக்களுக்கும் நன்மை தரும். அமைதி மற்றும் செழுமையான சீன-இந்திய செயல்நோக்கு ஒத்துழைப்புக் கூட்டாளியுறவைப் புதிய நிலைக்கு உயர்த்த நான் இந்தியத் தலைவர்களுடன் இணைந்து கூட்டாகப் பாடுபட விரும்புகிறேன் என்றார்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040